ஆறாவது முறையும் அளவில்லா அன்பு செலுத்தி, என்மீது குறையா நம்பிக்கை வைத்த எனது ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன். கலைஞரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நான், கழகத்தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் என்றும் மக்கள்நல வழியில் இயங்கிடுவேன்.
எனது ட்விட்டர் கணக்கு இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இதுவே என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமாகும்.
பொய்யான செய்திகள், தவறான தகவல்களிடம் இருந்து அனைவரும் தூர இருப்போம்!
சமூக வலைதளங்களில் எனது துறை சார்ந்த கோரிக்கைகள் வைக்கப்படுவதை நான் கவனித்து வருகிறேன். மாண்புமிகு முதல்வர்
@mkstalin
அவர்களது அரசு, மக்களுக்கான அரசு. எனவே, மக்கள் அனைவரும் பயன்படும் வகையில், கோரிக்கைகளை கண்டறிந்து, விரைந்து நிறைவேற்ற முறையான கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும்.
68வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல விருதுகளை குவித்த��ள்ள சூரரைப் போற்று திரைப்பட குழுவினருக்கும், முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறும் நடிகர்
@Suriya_offl
அவர்களுக்கும் வாழ்த்துகள்.
(1/2)
கோவையில் செயல்பட்டு வரும் 15 அம்மா உணவகங்களில் இன்று முதல் தொற்று கட்டுப்படுத்தப்படும் காலம் வரை உணவு விலையின்றி வழங்கப்படும். அதற்கான செலவினத் தொகையை தி.மு.கழகம் ஏற்றுக்கொள்ளும். இதன்மூலம், ஏழை எளியோர், நடைபாதை வாசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பயன்பெறுவர். 1/2
தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் வெளிவரும் புதிய செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. ஒரு துயரமான நிகழ்வை வைத்து சிலர் அரசியல் செய்திருப்பது நிச்சயம் ஏற்கமுடியாத, வேதனைக்குரிய ஒன்று.
தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற பொய்கள் புனையப்பட்ட அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
நெடுநாட்களுக்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள எனது தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாடுகளோடும், கன்றுகளோடும் சில நேரத்தை கழித்து, வெகு நாட்களுக்குப் பிறகு மாட்டு வண்டியையும் ஓட்டி மகிழ்ந்தேன்.
கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளுடன் சிறிது நேரம் திழைத்து இருந்தேன்,
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
புகார்களை ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
நடிப்பாற்றலில் நிகரற்ற இடத்தை ஆட்கொண்டு, தேசம் போற்றும் சிறந்த கலைஞராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வளமான ஆரோக்கியத்துடன், மேலும் பல சிறப்பான படைப்புகளை கலையுலகிற்கு தொடர்ந்து வழங்கிட வாழ்த்துகள்.
@ikamalhaasan
தமிழ் சினிமாவின் முகமாகவும், முகவரியாகவும் திகழும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நிறைந்த ஆரோக்கியத்துடன் தொடர்ந்து கலைப்பணி ஆற்றி மக்களை மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்.
#HBDSuperstarRajinikanth
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை கொடிசியா வளாகத்தில் 352 ஆக்சிசன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, மருத்துவ பணியாளர்களுக்கு நியமன சான்றிதழ் வழங்கி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலையுலகில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தன்னிகரில்லா இடம் பிடித்து, சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் ரசிக்கும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDRajinikanth
நண்பர் ஒருவர் இந்த புகைப்படத்தை இன்று பகிர்ந்தார். முற்போக்கு கொள்கைகள் நிரம்பிய பாதையில் பயணத்தை தொடங்கியிருந்த அந்த ஆரம்ப கால நினைவுகளில் மகிழ்வுடன் சற்று இளைப்பாறினேன்.
@mkstalin
@IPeriyasamymla
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் புதிய குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்ததாக தகவல் வந்தது. அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தாலுகா வழங்கல் அதிகாரி(TSO) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பான முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.(1/2)
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.
@mkstalin
அவர்களுக்கும், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.
@PKSekarbabu
அவர்களுக்கும் நன்றி!
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்கள், கார் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு அவசர ஊர்தி சேவை மூலம், தொற்று பரவல் மேலும் கட்டுப்படுத்தப்படும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள அக்சயா கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 28742 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை மீண்டும் ஆறாவது முறையாக வெற்றி பெற செய்த அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
இன்று பிறந்தநாள் காணும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு
@TRBRajaa
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இளைய சமூகத்திற்கு ஊக்கமாக இருக்கும் உங்களது களப்பணி என்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்!
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று என்னை சந்தித்தார். (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை, தமிழ்நாடு நூற்பாலை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.ஏ.பி.அப்புக்குட்டி அவர்கள் தலைமைச்செயலகத்தில் சந்தித்து, கொரோனா நிவாரணப்பணிகளுக்காக 2 கோடியே 52 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்கினார்.
விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாண்புமிகு முதல்வர் அவர்களது அரசின் செயல்பாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 5.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று வெளிப்படைத்தன்மையுடன் நேர்வழி பிறழாது பயணிக்கிறது கழக அரசு! அனைவரும் பாராட்டும் வகையில் நாட்டிலேயே சிறந்த முதல்வராக அண்ணன் தளபதி அவர்கள் திகழ்கிறார்.
கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்று பழகிவிட்ட சிலருக்கு இதனை பொறுக்க முடியவில்லை. 1/3
கோவை அரசு கலைக்கல்லூரியில் CREDAI பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
@Udhaystalin
அவர்கள் திறந்து வைத்தார். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கொண்ட இந்த மையம், கொரோனாவை வெல்ல கோவைக்கு துணை நிற்கும்!
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது பிறந்தநாளான இன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்கள், இன்று கோவை மாவட்டத்தில், கொடிசியா வளாகம், குமரகுரு கல்லூரி ஆகிய இடங்களில் புதிய மற்றும் கூடுதல் படுக்கை வசதிகளை துவக்கி வைத்து, கொரோனா தடுப்புப் பணிகளையும், சிகிச்சை முன்னெடுப்புகளையும் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் உத்தரவுப்படி, கொரோனா நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணை மற்றும் மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்கள் வழங்கும் பணி ஜூன் 11 முதல் நடைபெறும். பெறப்பட்ட டோக்கன் அடிப்படையில் ஜூன் 15 முதல் மக்கள் இவற்றை நியாய விலைக்கடைகளில் பெற்று கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்போருக்கு, 15 நாட்களில் அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 1/3
துன்பம் தீண்டும் போது, இளைப்பாற தோள் கொடுத்து, நம் விரல்களைப் பிடித்து பாதுகாப்பான வாழ்க்கைப் பாதைக்கு அழைத்துச் செல்பவர் தந்தை. தோழனாக, வழிகாட்டியாக, நம்பிக்கையின் உரமாக விளங்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
#HappyFathersDay2021
இன்று கோவை மாவட்டத்தில், கொடிசியா வளாகம், குமரகுரு கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் படுக்கை வசதிகளை ஆய்வு செய்தேன். மேலும், மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin
அவர்கள் நாளை கோவை வருவதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தேன்.
பள்ளி செல்லும் மாணவர்கள் சிலரை எனது வழியில் இன்று சந்தித்தேன். பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, சிலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததை கவனித்து அவற்றை வழங்கினேன்.
கொரோனா முழுமையாக மறையும் வரை முகக்கவசத்தை மறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.
@PKSekarbabu
அவர்களின் தலைமையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
தங்களது திரைப்படைப்புகள் மூலம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர்
@Suriya_offl
, ஜோதிகா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். (2/2)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை, சூலூரில் உள்ள தேஜா சக்தி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
தொற்றுப்பரவலை கட்டுபடுத்துவதோடு, சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது.
சாமானியரின் சுமையை குறைக்கும் விதமாகவும், உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், மாண்புமிகு முதல்வர்
@mkstalin
அவர்களின் வழிகாட்டலில் கழக அரசின் முதல் பொது & வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இக்கூட்டங்களில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன்!
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்ட பட்டினியில்லா தமிழ்நாட்டை உருவாக்கவும், மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைப்படி வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் "கலைஞர் உணவகம்" என்று அமைக்கப்படும்.
பசியில்லா தமிழ்நாடு படைப்போம், மக்கள் நலன் பேணுவோம!
கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கை இன்று நடைபெறுவதையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தலைவர் கலைஞரின் திருவுருவ படத்திற்கும், மெரினா கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளைப் பார்வையிட்டு, குடிமைப்பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து, நியாயவிலைக்கடை ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து நுகர்வோரிடம் கேட்டறிந்தேன்.
கோவை மாவட்டம், கதிரி மில்ஸ் வளாகத்தில் 306 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி
@mkstalin
அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
தொற்றில்லா தமிழகத்தை உருவாக்க, தமிழக அரசு அயராது உழைக்கிறது.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது 98 வது பிறந்தநாளான இன்று, வங்கக் கரையில் துயில் கொண்டிருக்கும் மகத்தான தலைவருக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் மரியாதை செலுத்தினேன். சமத்துவம், சமூகநீதியை மனதில் ஏந்தி, தலைவர் கலைஞர் காட்டிய வழியில், கழகத் தலைவர் தளபதி அவர்களோடு பயணிப்போம்.
கிராமத்து மாணவர்கள் உயர்கல்வியை எளிதில் அணுக, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி வேண்டும் என்ற எங்கள் நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றி, மாணவர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
கேப்டன் தோனியின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம். நான்காவது முறையாக கோப்பையை வெல்லும்
#CSK
அணிக்கு வாழ்த்துகள்!
இன்றைய
#CSKvsKKR
இறுதி போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற KKR அணிக்கும் வாழ்த்துகள்.
#IPLFinal
#ChennaiSuperKings
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரிசி அரவை முகமையாளர்கள் சங்கம் & ஒட்டன்சத்திரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட 35 இலட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய்க்கான காசோலையை வழங்கினேன்.
மாண்புமிகு அமைச்சர் திரு.
@ptrmadurai
வாகனத்தை வழிமறித்து, தாக்க முற்பட்ட பாஜகவினரின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சகோதரத்துவம் போற்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கு இடமில்லை என்ற விரக்தியில் இதுபோன்ற செயல்பாட்டில் ஈடுபடும் பாஜகவினர் அநாகரிகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
இன்று
#WorldPhotographyDay2021
உணர்வுகளின் மொழியைக் காட்சிப்படுத்தி, நொடியில் நடக்கும் நிகழ்வுகளை காலத்திற்கும் நிலைக்கும் நினைவுகளாக மாற்றும் படைப்பாளிகளுக்கு புகைப்பட தின வாழ்த்துக்கள்!
இந்நாளில் கடந்த ஆண்டிலிருந்து என் மனதிற்கு நெருக்கமான சில படங்களை பகிர்வதில் மகிழ்கிறேன்.
ஊழலே உலகம் என்று பழகிவிட்டதால் எல்லாவற்றையும் அந்த கண்ணோட்டத்திலேயே பார்த்து, தங்களது இருப்பை காட்டிக்கொள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் குறித்து விவாதிக்க நான் தயார். ஆதாரமற்ற புகார் கூறும் எதிர்க்கட்சி தலைவர் தயாரா? 1/4
இன்று, பழனி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் மற்றும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.
@IPSenthil
அவர்களின் பங்கெடுப்போடு இணைந்து நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய கருவியை துவக்கி வைத்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் ஆணைப்படி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களது தலைமையில் இன்று நடைபெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை & இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.
@mkstalin
அவர்கள் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக, இன்று கோவை மாவட்டம் PSG மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தேன்.
முந்தைய அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நெல் கொள்முதலில் சில சிக்கல்களை சந்தித்தோம். ஆயினும், மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 40 லட்சம் மெ.டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மண்ணில் சமூக நலன் மற்றும் சமத்துவத்தின் வலிமையை மேம்படுத்தும் வகையிலான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் திரு.
@ptrmadurai
அவர்கள் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் சந்தித்த போது.
#DMK
#TNBudget2023
தாய்த்திருநாட்டிற்கு '#தமிழ்நாடு' என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த சாதனையை மாற்றலாம் என்று நினைத்தால், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்ற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்.
-பேரறிஞர் அண்ணா (1968)
மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.
@KN_NEHRU
அவர்களின் தலைமையில், கொரோனா ஆய்வுக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர், துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். (1/2)
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவிப்பின்படி, கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் இன்று தொடங்கி வைத்தேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமூகநீதி, சுயமரியாதை, மொழிப்பற்று, மாநில உரிமை போன்ற கொள்கைகளின் நீட்சியாக கழக ஆட்சி இருக்கும் என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டசபையில் முழங்கியுள்ளார்.
உறுதியான கொள்கைப்பாதையில் உழைக்கும் முதல்வர் அவர்கள், தமிழரின் கனவுகளுக்கு உயிரூட்டுவார்!
Attended a meeting chaired by Union consumer affairs minister
@PiyushGoyal
in Delhi regarding community kitchens. Highlighted the long tradition of Tamil Nadu being a model welfare state and the steps taken by govt under hon'ble CM
@mkstalin
to ensure food security for all. 1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.
@mkstalin
அவர்களது தலைமையில் 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற கொள்கையில் பயணிக்கும் கழக அரசு, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடையில் பொருட்களின் தரம் குறித்தும், பயனாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி குறித்தும் ஆய்வு செய்தோம்.
ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களது தலைமையிலான அரசு. அந்த வகையில், ஒட்டன்சத்திரம் நகரத்தில் புதிய பேருந்து வழித்தடங்களை இன்று துவக்கி வைத்தோம்.
தோட்டத்திற்கு சென்று வயல்வெளியின் பசுமைக்கு நடுவே நடந்து செல்வதும், மாடுகள் கன்றுகளுடன் நேரம் செலவிடுவதும் விவரிக்க முடியாத அமைதியை உள்ளத்தில் எப்போதும் ஏற்படுத்தும்.
எனது அன்றாடம் இயற்கை மற்றும் ஆவினம் போன்ற பிற உயிர்கள் நிறைந்ததாக அமையப்பெற்றதற்கு நான் போற்றும் உழவுக்கு நன்றி!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி, குடும்பஅட்டை வேண்டி விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு 15 நாட்களில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய போது.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களது தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்
@IPeriyasamymla
அவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
"செயல்" - கழக அரசுக்கு மிகவும் நெருக்கமான சொல்!
மாண்புமிகு முதல்வர் அவர்களது தொடர் சாதனைகளின் வரிசையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள பரப்பலாறு அணையை தூர்வாரும் பணிகள் தொடங்குகிறது.
நாங்கள் அளித்தது வாக்குக்கான வாக்குறுதி அல்ல, மக்களின் வாழ்க்கைக்கானது! சொன்னதை செய்வோம்!
புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தல், மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். 1/4
வியர்வை சிந்தி விளைவிக்கும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உணவு கொடுக்கும் உழவருக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களது தலைமையிலான கழக அரசு உறுதுணையாக இருக்கிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்த போரில் சிறப்பாக பங்காற்றுவோம்.
நன்கொடை- செலவினங்கள் யாவும் பொதுவெளியில் வெளியிடப்படும். எனவே, ஒன்றிணைவோம், பெருந்தொற்றை வென்றெடுக்க பங்களிப்போம்.
#CMReliefFund
#MKStalin
இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்களது பிறந்தநாள்!
சமூகநீதியை சாத்தியப்படுத்தும் வகையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பெருமைக்குரியவர் அவர். தமிழ்நாட்டுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நெருக்கமாக இருந்த அவரை நினைவில் கொள்வோம்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, சத்திரப்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை திறந்து வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலுடன் தொகுதியின் தேவைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும்.
பொது வாழ்க்கையில் நான் அடி வைத்த நாள் முதல் இன்று வரையிலும் அரசியல் ஆசானாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வரும் கழகத் துணைப் பொதுச்செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு.
@IPeriyasamymla
அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் உத்தரவுப்படி, கொரோனா நிவாரண தொகையின் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் & 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ஆகியவற்றை வழங்கும் பணியினை கோவையில் கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்றத் தொகுதிகளில் இன்று தொடங்கி வைத்தேன்.
கழக தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் திரு.
@TRBRajaa
அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
புதிய பொறுப்பிலும் பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படிபடி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி இராஜாம்பட்டி ஊராட்சியில் வட்டமலைபுதூர் - அத்திமரத்துவலசு சாலையை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்த இன்று நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டேன்.
அரசியலிலும், மக்கள் பணியிலும் இளைஞர்களுக்கு ஒரு உன்னத உதாரணமாக திகழும் கழக இளைஞரணி செயலாளர்- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு.
@Udhaystalin
அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலவாடம்பட்டி ஊராட்சியில் இராமபட்டிணம்புதூர் கரும்பு அபிவிருத்தி சாலையிலிருந்து மலை அட���வாரம் பெரியார் நகர் சாலையை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்த பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம், துடியலூரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, CRI கொரோனா சிகிச்சை மருத்துவமனையை துவக்கி வைத்தோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டம் கணபதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லட்சுமி மில்ஸ் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.