மனைவிக்காக கொஞ்சமும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் , திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே எப்பவும் இருப்பேன் என்று நண்பர்களுக்காக கெத்துகாட்டுபவர்கள்....
வாழ்க்கையில் தோற்றுப்போவார்கள்
தாம்தூமென்று கோபத்தில் கத்தி , திட்டி சண்டையிட்டு "இனி நீ எனக்கு வேண்டாம்" என அறிக்கையிட்டு...
சிறது நேரத்திலேயே ஒரே சோபாவில் இருவரும் உரசிக்கொண்டே அமர்ந்து காபி குடிப்பதே சிறந்த தாம்பத்யம் 😎😍
கவிதை எழுதுவது ரொம்ப ஈசி 😌
"டேய் எரும ,எங்க போய் தொலைஞ்ச ,சீக்கிரம் வந்து தொலை" - என்பதை
"அன்பே!
உன்னைத் தேடி
என் விழிகள்
தவிக்கின்றது
தாமதமில்லாமல்
வந்துவிடு" என்று சொன்னால் அது கவித 😎😜
சாப்பிடும்போது புத்தகம் படிக்காத - ஆச்சி அம்மாவிடம்
சாப்பிடும்போது டிவி பாக்காத - அம்மா என்னிடம்
சாப்பிடும்போது மொபைல் பாக்காத - நான் பிள்ளையிடம்
தலைமுறை மாறினாலும் ஏதோ ஒரு பழக்கம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது 😅
கணவன் கோபத்தில் காச்பூச் என்று திட்டியதும்
கண்களிலிருந்து சத்தமின்றி கண்ணீர் வடித்த காலம் மாறி
வழக்கம்போல கத்துகிறது என்று சிரித்தபடியே நகருவதே
பக்குவம் எனப்படும் 😌
"நான் பாத்ததுலயே வொர்ஸ்ட் செட் இதுதான்"
என்று டீச்சர் சொல்லும் போது வரும் பெருமைக்கு நிகரானது தான்
"என்னைத் தவிர உங்ககூட வேற எவளாலும் குப்பை கொட்ட முடியாது" 😎😎
நம்ம வீட்டை அடுத்தவன் இல்ல , நாம பூட்டுனா தான் சேஃப்..
அதே மாதிரி தான் நம்ம மனசும்..
அடுத்தவன் வந்து ஆறுதல் சொல்லி தேத்தனும்னு எதிர்பாக்காம நாமளே தெளிவாகுறதுதான் நல்லது 💪💪😎
திருமண வாழ்க்கை...
Expectation :
துணி காயப்போடும்
என்னை ரசிக்கும்
உன் பார்வையால்
குடைசாய்கிறது மனது 💕💕
Reality :
அதான் துணிய காயப்போடுறேனு தெரிதுல...பெறகென்ன பார்வை.. போய் குக்கர் அடுப்ப ஆஃப் பண்ணுங்க 😈
சாப்டியா, சாப்பிடுறியா என வீட்டில் அடிக்கடி கேட்கும் உறவை தொல்லையாகவோ, எரிச்சலாகவோ கருதாதீர்கள்.
அப்படி கேட்ககூட ஆளில்லாமல் அநேகர் தனிமைப்பட்டு இருக்கிறார்கள் 😒