ருத்திராட்சங்களை அடியார்களுக்கு இலவசமாக தருகின்ற தொண்டினை முருகனடிமை #ராஜேந்திரன் எனும் அன்பர் செய்து கொண்டுள்ளார். (வாட்சப்)
#9442441111
என்ற எண்ணுக்கு நமது முழு முகவரியையும் அனுப்பினால் மூன்று ருத்ராட்சங்களை ஏற்ற கயிரோடு அனுப்பி வைக்கிறார்...!!
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்!
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்!
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ முருகா!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
#முருகாசரணம் 🐓🦚
தீபாவளி செலவுக்காக வைத்திருந்த ₹25000 த்தை ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவுக்காக அளித்துவிட்டேன், அடுத்தவங்க வாழ்கையில ஒளி ஏற்றுவதே சிறந்த தீபாவாளி..❣️. #ஷக்தி
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம்
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!
பள்ளம் நோக்கி பாய்ந்து
வரும் வெள்ளம் என அருள்
படைத்த வள்ளலே!
நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே!
#முருகாசரணம் 🐓🦚
" திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் "
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி முன்பே என்னை ஆண்டு கொண்ட முனிவா முழுமுதலே இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே நண்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே!
- #திருச்சிற்றம்பலம்.
" திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் "
உம்பர்கட்கு அரசே ஒழிவு அற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து என்குடி முழுது ஆண்டு வாழ்வு அற வாழ்வித்த மருந்தே செம்பொன் துணிவே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.
எதையும் கையாண்டு உங்களையும் கூட உங்களுக்காக கையாண்டு பாதுகாப்பவன் எதிலும் கலந்த ஏகமான இறைவன் தானே ..
நீங்கள் உங்களை பாதுகாக்கவில்லை, உங்களின் உள்ளுணர்வாக பாதுகாப்பவனும் அவனே என்ற மெய்யை உணருங்கள் ..!!
வாழ்த்துகள்
#திருச்சிற்றம்பலம்
#நடராஜா #நடராஜா
எதற்கும் கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை !!
எதுவுமாக கடவுளே இருக்கிறார் என்பதே நிதர்சனம் !!
நம்பிக்கை என்பது சலனத்தின் வெளிப்பாடு !!
நிதர்சனம் என்பது தீர்க்கத்தின் மெய் ..!
#திருச்சிற்றம்பலம்
#நடராஜா #நடராஜா
புலரும் பொழுதினிலே புதிதாய் எழும் கதிரே மலரும் தமிழ் வளர்ந்த மேதவமே வளரும்
திருமாலுக்கு மருமகனாம் மாசற்ற குமரனின் கை
வேலுக்கு நிகர் ஏது சொல்!
#முருகாசரணம் 🐓🦚
#சிவயநம
திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
(காமிகாகமம்)
14. கரு உற்பத்தி
பாடல் எண்:473
திருச்சிற்றம்பலம்
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
(அ. சி.) அதன் புதலாய் - அதன் செடியாய்
ஓம் #சிவாயநம :
வியாழன் சிவ காலை வணக்கங்களுடன்.....
வெற்றிடமாக இருந்த என் இதயத்தில் நின்னை நிலை நிறுத்தி நின்னை வழிபடும் திருவருளைப் பெற்றேனே இப்பிறவியில், எம் வேதபுரீஸ்வரனே.!!! வீடுபேற்றினையும் தந்தருள்வாயே வேதநாயகனே எம் ஈசனே!!!
" திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் "
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி நன்று ஆக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனைகொன்றைப் பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ!
நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்
கோலம் பொன்னைகயும் நிழலாட ஆடி வரும் தோகை மயில் அருகாட அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட கந்தா கடம்பா!
குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா!
தென்பழனி திருமகனே
வ��லவா உன் புகழை பாட வா!
#முருகாசரணம் 🐓🦚
சிவயநம
திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
(காமிகாகமம்)
14. கரு உற்பத்தி
பாடல் எண்:464
திருச்சிற்றம்பலம்
பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.
திருச்சிற்றம்பலம்
ஓம் #சிவாயநம :
ஞாயிறு சிவ காலை வணக்கங்களுடன் ......
குரங்கினைப் போன்று அங்கும் இங்கும் அலையும் மனதினை, புத்தி என்னும் வாழால் அடக்கி புனிதனாக்கிடுவாயே எம் பூதலிங்கேஸ்வரனே!!!!
முருகன் உள்ளங்கையில் வேலிருக்கும் அழகைப் பாருங்கள்!
நெற்றியிலே நீர் இருக்கும்
அழகைப் பாருங்கள்!
முல்லை பூப்போல் சிரித்துவரும் காட்சி பாருங்கள்!
அதில் எல்லையில்லா பேரின்பமும் இங்கே பாருங்கள்!
#முருகாசரணம் 🐓🦚
இமைப்பொழுதும் உனக்குள் தோன்றும் எண்ணத்தை கவனி
உனக்குள் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் உனக்குள் இருக்கும் எண்ணங்கள் படியே தான் நடக்கிறது
எதற்கும் நீயே பொருத்தம்
#திருச்சிற்றம்பலம்
அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்!
அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்!
சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்!
காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்!
கருணையே வடிவான முருகன் பாருங்கள்!
நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்!
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்!
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்!
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருள் அன்றோ கந்தா!
உன் அருளன்றோ முருகா!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம்..!!
#முருகாசரணம் 🐓🦚
கந்தனடியே நினைத்து சங்கத்தமிழ்
மாலை கொண்டு வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
பரங்குன்று வளர் குகனோடு தங்கி வரவே நமக்குள் பொங்கி வரும் செல்வம் பதினாறுமே!
#முருகாசரணம் 🐓🦚
#சிவயநம
#திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
(காமிகாகமம்)
14. கரு உற்பத்தி
பாடல் எண்:466
#திருச்சிற்றம்பலம்
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே.
#திருச்சிற்றம்பலம்
நாளெல்லாம் உன்னைப்
பாடுகின்றேன் அப்பா!
முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா!
என் கண்கள் குளிர வந்து
நின்றாடப்பா!
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா!
முருகா என்றழைக்கவா முத்துக் குமரா என்றழைக்கவா!
கந்தா என்றழைக்கவா கதிர் வேலா என்றழைக்கவா எப்படி அழைப்பேன்
#முருகாசரணம் 🐓
பறிகொடுத்த எதுவும் தன்னை விடுவிப்பதாகும்!!பறிகொடுக்காத எதுவும் தன்னை விடுவிக்காததாகும்
பறிகொடுக்கவே இந்த மாய வாழ்வு!!பறி கொடுப்பதை தாங்கிக் கொள்ள முடியாத வாழ்வே பெரும் துயர வாழ்வு
#திருச்சிற்றம்பலம்
எனக்கு சொந்தக்காரன் ஒருவனே !!
அவனே என்னை எனக்கு சொந்தமாக்கி என் சொந்தம் என்று எதையும் எண்ணும் !!
சொந்தத்துக்கு எல்லாம் காரணனாக இருக்கிறான் !!
மற்றவை அனைத்தும் அவனால் அவனின் பிம்பங்களே !!
இந்த எனக்கு கூட நமக்கு பொதுவான பெயர் தான் ..!!
#திருச்சிற்றம்பலம்
#நடராஜா #நடராஜா
கொண்டு பார் என்று கொடுக்கிறான் !! அணிந்து பார் என்று தருகிறான் !! அனுபவித்து பார் என்று அருள்கிறான் !! துணிந்து பார் என்று துணைநிற்கிறான் !! வாழ்ந்து பார் என்று வாழ்விக்கிறான் !! இதைவிட என்னப்பா வேண்டும் என்றும் எதிர்நோக்குகிறான் !!
#சிவ_காலை வணக்கம் 🙏♥️
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!
#முருகாசரணம் 🐓🦚
🙏♥️திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 🙏♥️
நாயின் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி ஆயக் கடவேன் நானோ தான் என்னதோ இங்கு அதிகாரம் காயத்து இடுவாய் உன்னுடைய கழல்கீழ் வைப்பாய் கண் நுதலே.
திங்கள் சிவ காலை வணக்கங்களுடன் ...
இறைவன் யாருக்குக் கருணை காட்சி நினைக்கின்றானோ, அவர்ளையே மிகவும் சோதனைக்கு உட்படுத்துவான். அந்த சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்தருள்வாயே வேதபுரீஸ்வரா.
உணர வேண்டிய மெய் !!
உன்னுடையது என்பது ??
நீ கழட்டி போடும்படி இல்லை !!
அது உன்னை கழட்டி போடும்படியே இருக்கின்றது ..!!
உன்னுடையது என்பது பொய் !!
உன்னையும் உடையது என்பதே மெய் ..!!
#திருச்சிற்றம்பலம்
#நடராஜா #நடராஜா
கந்தா முருகா வருவாயே
சாந்தி பெறவே அருள்வாயே
கனவல்ல வாழ்வென்று சொல்வாயே
கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே!
கணமேனும் வாராய் என் தெய்வமே
கண்ணார கண்டாலும் போதுமே
துணையாகி வருவாய் எனதாருயிரே
நீ சொன்னபடியே நான் ஆடுவேனே!
#முருகாசரணம்
குன்றாறும் குடி கொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா!
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கே எட்டாத
தத்துவமே முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா!
#முருகாசரணம் 🐓🦚
பழநியிலே இருக்கும் கந்த
பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு!
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!
புதுப்புது இன்பங்கள் புதுப்புது துன்பங்கள்
இந்த உலக மாயையில் வாழும் வரை இது நடந்து கொண்டே இருக்கிறது
இன்ப துன்பம் இரண்டையும் புதுப்பிக்கும் புதுமையை உணர்வோரே!! இன்புற்று இறைவனடி சேர்வார்
#திருச்சிற்றம்பலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில்
கொடுத்தது நிகழ்காலம்!
வரும் காற்றில் அணையாச்
சுடர் போலும் அருள் கந்தன்
தருவான் எதிர்காலம்!
எனக்கும் இடம் உண்டு அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு!
#முருகாசரணம் 🐓🦚
கற்பனையோ அல்லது உண்மையானதோ மனித மனது உருவங்களில் இலயிக்கக்கூடிய தன்மை கொண்டது. உருவமற்ற அருவத்தில் அது இலயிப்பதில்லை. அதனால்தான் இறைவனை தான் விரும்பிய உருவங்களில் எல்லாம் அழகு படுத்திப் பார்த்தனர் நமது முன்னோர். எளிதில் மனதில் புகுந்து பதிந்து விடும் உருவ வழிபாடு ஆகச் சிறந்தது.
ஓம் #சிவாயநம :
புதன் சிவ காலை வணக்கங்களுடன் ......
எத்தனையெத்தனை சோதனைகள் வந்து எங்கெங்கோ சென்றாலும் இறுதியில் நீர்தானே கை கொடுப்பீர் எம் ஈசனே!! சிவனே!!!
#நமச்சிவாய
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் அண்ணாமலையாரின் திருவருளால் எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்..
ஓட்டங்கள் மட்டுமே தெளிவாய் இருக்கிறது படைப்புகளிடம்!! எதற்காக இந்த ஓட்டம்?? என்ற தெளிவும் யோசிப்பும் இல்லை
அப்படி தெரிந்தாலும் பயணிப்பது என்னவோ தெய்வங்கள் இல்லாத மாய தெய்வங்களில்
சிவமே மெய் மற்றது எல்லாம் பொய்
#திருச்சிற்றம்பலம்
ஓம் #சிவாயநம :
சனி சிவ காலை வணக்கங்களுடன் ....
நின்னை அடைவதற்கு பலபல சோதனைகளையும், சாதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கின்றாயே ஈசனே!!!
கந்தனவன் வென்ற இடம் கடல்பாடும் தேசம் அது கருணைக் கைலாசம் அங்கு கமழுதையா மார்பினிலே கடம்பமலர் வாசம்!
குன்று தோராடுவது குமரனது தேசம் அது கோடிக் கைலாசம் அங்கு
கொஞ்சுதய்யா மார்பினிலே குறிஞ்சுமலர் வாசம்!
#முருகாசரணம் 🐓🦚
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும்
கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில் மாயோன் மருகா முருகா என்றே நினைத்த போது
நீ வரவேண்டும்!
முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வர வேண்டும்!
#முருகாசரணம் 🐓🦚
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் "
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி நன்று ஆக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனைகொன்றைப் பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ!