கூட்டணி இல்லாமல் வாக்கிற்கு பணம் இல்லாமல் தனித்து களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு சாதி மறந்து, மதம் கடந்து அண்ணன் சீமான் அவர்களின் இலட்சிய உறுதியில் நம்பிக்கை கொண்டு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 95,726 வாக்குகளை அளித்த உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகள்
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
அனைவருக்கும் புரட்சி வணக்கம்.
காவல்துறை பாதுகாப்பில் ஒலி ஒளி அமைப்போடு நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி ஆகிய நான் எனது முதல் வாகன பரப்புரையை பவானி சட்டமன்ற தொகுதியில் தொடங்கியுள்ளேன்.
நன்றி....
🔥🔥🔥🔥🔥
அண்ணன் சீமான் அவர்கள் மேல் ஆயிரம் விமர்சனங்கள் யார் வேண்டுமானாலும் வைக்கலாம்...
ஆனால் யாராலும் செய்ய முடியாத எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளை தமிழ் தேசிய அரசியல் களத்தில் உறுதியோடு நிற்க வைத்த புரட்சியாளன்...
12 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழர் களம்...
திருப்பூர் நாடாளுமன்றம் -
அந்தியூர் தொகுதி - பர்கூர் ஊராட்சி- இதுவரை எந்த வேட்பாளரும் செல்லாதே குட்டையூர் மலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி...
“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி , அண்ணன் சீமான் அவர்கள் அறிவுறுத்தல்படி , கோபிச்செட்டிபாளையம் பச்சை மலை முருகனை வழிபடச் செல்லும் முன் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடி கோவிலின் உள்ளே சுற்றி வந்தோம்..
அன்பு மகள் இசைமதி தமிழ் தேசிய விடுதலை பயணத்தில் உனது பங்களிப்பு சிறக்கட்டும்... தமிழ் வழி நடத்த , உலகத் தமிழர்களின் பேரன்புடன், முன்னோர்கள், மாவீரர்களின் ஆசிகள் உனக்கு துணை நிற்கட்டும்...
**பிறந்தநாள் வாழ்த்துகள்**
தமிழ் மொழி காக்க போர் தொடங்கிற்று... கொட்டடா முரசம்...
நவம்பர் - 1
மானத் தமிழரெல்லாம் தமிழ்க் கொடியோடும் புலிக்கொடியோடும் சென்னையில் நாளை மறவாமல் கூடுவோம்..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகா அவர்களுடன் நேற்றைய ( 9/2/23) பரப்புரை ஈரோடு பேருந்து நிலையம், வீரப்பன் சத்திரம் வழியாக வார்டு 14 , 15 உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வரவேற்புடன்...
நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கு திருப்பூர் நாடாளுமன்ற பெருந்துறை தொகுதி பழைய பேருந்து நிலையம் அருகில் தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று மரக் கன்றுகள் கொடுத்து நன்றி தெரிவித்தோம் ... மனம் மகிழ மரக் கன்றுகளை மக்கள் வாங்கிச் சென்றனர் .
ஈரோட்டு மண்ணில் நான் பிறந்தது முதல் விவசாயியாக... ஆசிரியராக.... கேபிள் ஆப்பரேட்டராக களத்தில் நின்றாலும் நாம் தமிழர் களத்தில் தலைவனின் தம்பியோடு நிற்கின்ற பெருமையே பெருமை... ஆகச் சிறந்த புரட்சியாளராக நம் அண்ணன் சீமான் அவர்கள்...
ஊரில் சில வாக்குகள் நாம் தமிழருக்கு விழும் என்பவர்களுக்கு மத்தியில் திருப்பூர் நாடாளுமன்றம் பெருந்துறை தொகுதி நேற்றைய பரப்புரையில் குன்னத்தூரில் பேசியதை கேட்டு வாழ்த்திய மக்கள்.. ஆரத்தி எடுத்து ஊரே கூடி துரத்திக்காட்டில் நாம் தமிழராக இணைந்தார்கள்...
மூத்தவர்களுக்கு நன்றிக் கடனையும்...
இளைய பிள்ளைகளுக்கு கடமையையும்...
செய்து தமிழ் தேசிய விடுதலைக் களத்தில் சமரசம் இன்றி நிற்கும் அண்ணன் சீமான் அவர்கள் ,
உலகத் தமிழரின் ஒற்றை நம்பிக்கை ...
சந்தித்த நேரங்களில் கூட சிந்தித்த இலக்கின் ஓட்டத்தைப் பதிவு செய்யும் பேராசான் ...
உழைக்கும் மக்களின் உரிமைக்காக உடன் நின்று உண்மை வெல்ல போராடும் புரட்சியாளன் சீமான் அவர்கள்... தமிழுக்காக, தலைவரின் இலட்சிய உறுதியை ஏற்று , களத்தில் நிற்கும் தமிழ் தேசிய ஆடுகளத்தின் ஆட்ட நாயகன் அண்ணன் சீமான் அவர்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்... அடிப்படை அரசியல் மாற்றம் ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்கட்டும்...
வேண்டாம் வேண்டாம் இலவசம் வேண்டாம்...
உலகம் முழுவதும் உள்ள நமது உறவுகள் எத்தனையோ இடர்பாடுகளைக் கடந்து மான உணர்வோடும் இன உணர்வோடும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பை செலுத்தியமைக்கு தலை வணங்குகிறேன்.
களம் காண முடியாதவர்கள் அனைத்து நிலைகளிலும் ஆதரவாக நின்றது தமிழர் வரலாற்றில் புரட்சி . 😍
திருப்பூர் பொதுக் கூட்டம்... கல்லில் சிற்பி செதுக்கிய ஒலிவாங்கியை அண்ணன் என்னிடம் கொடுத்தது உழைக்கும் மக்களின் போர் குரலாய் .. மக்களின் வலியை.. மண்ணின் சிக்கலை நான் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே...
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் புரட்சியாளன் அண்ணன் சீமான் அவர்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதி அக்ரஹாரம் பகுதி நேற்றைய பரப்புரையில் மக்கள் பெரும் வரவேற்பு....
ஈரோடு - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய *மக்களாட்சியை பாதுகாப்போம்* மக்கள் சங்கமம் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலில் அண்ணனின் படை தளபதிகளாக நமது உறவுகளோடு கலந்து கொண்டு நேற்று நான் வாழ்த்துரை வழங்கிய போது ...
நாம் தமிழர் கட்சி - ஈரோடு மாவட்டம் - அத்தாணி பேரூராட்சி - வார்டு 3 . வேட்பாளர் மோதிலால் பிரசாத் B.E அவர்களுடன் *விவசாயி* சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று பரப்புரை....
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகா அவர்களுடன் பெரிய வலசு , மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய (10/2/23) பரப்புரை மக்களிடம் மிகுந்த வரவேற்பு... தம்பி மதிவாணன் பேச்சு சிறந்த உரை வீச்சு...
நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற ( வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி ) தேர்தல் பரப்புரைக்காக கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் தயார் செய்த வாகனத்தை
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரபல மருத்துவர் ஐயா கார்மேகம் அவர்கள் இன்று வழங்கிய போது...
பழைமையான நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர், கோவை , பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய நாடாளுமன்ற 5 வேட்பாளர்கள் பொறுப்பாளர்களுடன் இணைந்து இன்று மனு கொடுத்தோம்
குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரை வார்ப்பதை கண்டித்து அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் குமரி மாவட்டம் திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வுக்காக தற்போது கண்டன் விளை பகுதியில் துண்டறிக்கை கொடுத்தல்...
மனிதர்கள் உயிர் வாழ நீரும் சோறும் முக்கியம்.. அதற்காக போராடுவதே எனது இலட்சியம்... பவானி ஆற்றைக் காப்போம்.. நீர், நிலம், காற்றை மாசுபடுத்தும் சிப்காட் தொழிற்சாலைகளைப் புறக்கணிப்போம்... பசுமை தொழிற்பேட்டைகளை உருவாக்குவோம்...
பெருவெளியை முடக்க நினைக்கும் திராவிட முட்டாள் கூட்டம். *அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை* என்று கணித்த சித்தர்கள் வழி நமது வள்ளலாரின் பேரன்பு தத்துவத்தை மழுங்கடிக்க நினைக்கும்,
அதிகார வர்க்கத்தின் கொட்டத்தை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் அடக்கியே தீருவோம்.
பேரன்பு கொண்டு நான் நேசிக்கும் அன்பு சொந்தங்களே ! மண்ணின் சிக்கல்களை மக்களின் தேவைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்து அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்க நாம் தமிழர் கட்சியின் வெற்றிச் சின்னமான *ஒலி வாங்கி* ( மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்..
இன உணர்வோடும் , மான உணர்வோடும் , அன்போடும் செலுத்திய ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் விலைமதிப்பற்ற பெருமைக்குரிய வாக்குகள்... உறுதியாக தமிழ் மண்ணைக் காக்கும்.. மானம் காக்கும்.. தமிழ் தேசியம் கட்டாயம் வெல்லும்..
சக்தி மசாலா நிறுவன விற்பனைப் பொருட்களில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் அனுமதி பெற்றே கோரிக்கை வைத்தோம்...
ஆனால் நான் உள்ளிட்ட 20 உறவுகள் மீதும் வழக்கு தொடுத்தவர் திருமதி.மஞ்சமாதா , கிராம நிர்வாக அதிகாரி, கங்காபுரம் , ஈரோடு.
எங்கோ இடிக்கிதே ??
பொருள் தேட கடல் கடந்து சென்றாலும், அங்கும் *செந்தமிழர் பாசறை*யைக் கட்டி அண்ணன் சீமான் அவர்களின் நம்பிக்கைக்குரிய படை தளபதிகளாக இலட்சிய உறுதியோடு களத்தில் நிற்கும் சவுதி - ரியாத் , தமாம் ,ஜித்தா மண்டல பொறுப்பான உறவுகளோடு 3 நாட்கள் பாலை நில மண்ணிலே பயணித்ததில் பெரும் மகிழ்ச்சி
ஈரோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்கள் நேற்று (02/02/2023) வேட்புமனு தாக்கல் செய்தார்.... நாம் தமிழர் வென்றே ஆகவேண்டும்....
கோபி தொகுதி - நம்பியூர் ஒன்றியம் - கரட்டுப்பாளையம் ஊராட்சி - அண்ணன் ���ீமான் அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு களத்திற்கு வர இருக்கும் மேட்டுக்காடு பகுதியைச் சார்ந்த உறவுகளுடன் தற்போது சந்திப்பு...
அண்ணன் அசாத்தியமானவர்.
தமிழுக்கும் தலைவருக்கும் தலைவணங்கும் பேராற்றல்,
பெற்ற தாய், கட்டிய துணைவி , பெற்ற மகன்கள் பெருமைப்படும் வகையில்
தலைவரின் இலட்சிய உறுதியோடு அறம் சார்ந்த அரசியலை நிறுவ பல ஆயிரம் கோடி மக்களின் அன்பைப் பெற்று வலிமையாக களத்தில்,
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா .
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி - வேட்பாளரின் இன்றைய வாகன பரப்புரை - பவானி தொகுதி - பெருந்தலையூர், கவுந்தப்பாடி , ஓடத்துறை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் நல்ல வரவேற்பு ...
நாம் தமிழர் கட்சி - ஈரோடு மாவட்டம் - கோபி தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொளப்பலூர் சாணார் பாளையம் அருகில் உள்ள ஏரியில் இன்று ( 11/9/22) பனை விதை ஊன்றப்பட்டது ...
மே - 18
காலங்கள் ஓடலாம்...
ஆனால் காயங்கள் இன்னும் ஆறாத வடுக்களாய்...
மறப்பது கடினம்...
ஆனால் விதையாய் விழுந்த மாவீரர்களின் கனவுகள் நனவாவது உறுதி...
இழப்பதற்கு இனி ஏதுமில்லை
ஆனால் வெல்வதற்கு மாவீரர்களின் ஆன்மாக்கள் துணையாக...
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
திருப்பூர் நாடாளுமன்றம் - அந்தியூர் தொகுதி , வெள்ளித் திருப்பூர் ஊராட்சி, வார்டு 4 - குரும்பனூர் காடு பகுதியில் கிராம மக்களின் பேராதரவுடன் நேற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. கிளைகளை கட்டமைத்து தொடர்ச்சியாக களத்தில் பணி செய்யும் தம்பி ரூபன் குமார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்..
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தை 7 நாட்கள் தண்ணீர் பகிர்ந்தளிக்குமாறு உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தக் கோரி 7;ஆவது நாளாக தொடர் பட்டினி போராட்டம் நடத்தி வரும் காங்கேயம் வெள்ளகோயில் கடைமடை விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த பகுதி மக்களும் சாலை மறியல் செய்ய தற்போது களத்தில்..
அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, இந்திய வல்லாதிக்க அரசை எதிர்த்தும் அதற்கு அடிவருடி நிற்கும் திமுக ஸ்டாலின் அரசை கண்டித்தும் ஈரோடு மாவட்டம் - பவானி தொகுதி - பவானி நகரத்தில் நடந்த நேற்றைய நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்....
ஈரோடு மாவட்டம் - கோபி தொகுதி- நம்பியூர் பேரூராட்சி - பேருந்து நிலையத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது...
காவல் துறை எங்களுடன் சேர்ந்து நின்றது நாம் தமிழர் களத்தின் வெற்றி... உறுதி ஏற்போம்...
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நாம் தமிழர் கட்சி - ஈரோடு மாவட்டம் - அந்தியூர் தொகுதி தாசளியூர் பகுதியில் வடிவேல் என்பவரை கட்சியில் இணைக்க தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் மிக நேர்த்தியாக சென்று சந்தித்த விதம் அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையை கொடுத்தது. பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
நாம் தமிழர் கட்சி - ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் (9/10/22) சிறக்க பல பணிகளை ஆக்கபூர்வமாகச் செய்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள் 💐💐💐💐💐
ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் பொட்டலங்களில் எழுதும் பெயர்களில் தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தர வேண்டும். இந்தி வேண்டாம் என்ற *அண்ணன் சீமான்* அவர்களின் கருத்தை ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் சக்தி மசாலா நிறுவனத்தாரிடம் இன்று நேரில் சென்று வலியுறுத்தினோம்.
ஈரோட்டு மண்ணின் மக்கள் நாம் தமிழர் முதல் வெற்றியைப் பதிவு செய்து நமது வேட்பாளர் படித்த எளிய மகள் மேனகா நவநீதன் அவர்களை சட்ட மன்றத்தில் உறுப்பினராக ஓங்கி குரல் கொடுக்க வைத்து விட வேண்டும் என்ற பேராவலுடன் நேற்றைய பரப்புரையில் ...
*அண்ணன் சீமான் அவர்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இல்லை* போகப் போக பாருங்கள் தவிர்க்க முடியாத ஆற்றலாக மாறுவார்... சீமான் அவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்களும் கட்சியின் வளர்ச்சிக்கே.. உண்மையை சொல்லி உற்சாகம் தந்த எங்கள் ஈரோடு நகர தந்தி தொலைக்காட்சி நிருபர் அவர்களுக்கு வாழ்த்துகள்