கமல்ஹாசன் இன்னார் என்றே அறியாத ஒரு குழந்தை சாவகாசமாக அவர் அருகில் போய் உட்கார்ந்து கொள்கிறது. அவரும் அந்தப் பிள்ளையை வாஞ்சையோடு அணைக்கிறார் ❤️
களத்தூர் கண்ணம்மா குட்டிக் கமல் ஐ
மூத்த கமல் சந்திப்பது போல இருக்கிறது 💚
குழந்தைகள் முன் நாமும் குழந்தைகள் தான்
தன் பாட்டன் மழலை மொழி ❤️
இதைப் பார்க்கும் போது இலக்கியா பிறந்த போது
“என் பொன்னம்மா பொன்னம்மா....
அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை”
என்று கைக்குழந்தையிடம் நான் பாடியது
நினைவுக்கு வருகுது.
எம் ஊனோடும் உயிரோடும் ராஜா.
மேற்குத் தொடர்ச்சி மலை
சொல்ல வார்த்தைகள் இன்றிப் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சிறு இடைவேளை எடுத்துக் கொள்கிறேன். என்னளவில் இதுவரை பார்த்த படங்களில் உச்சம் இதுதான் என்பேன்.
பாசாங்குத் தனமில்லாத மக்கள் சினிமா என்றால் இதுதான்.
பூவரசம்பூ பூத்தாச்சு பாட்டு மாதிரித் தானே வேணும் இந்தாங்க ஆலோலங்கிளித் தோப்பிலே 😀😍
26 வருடங்களாகப் பிரியதர்ஷனே அதைக் கண்டு பிடிக்கவில்லை.
மலையாளப் பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்பது என் பல வருட மனக்கிடக்கை ❤️
இன்று பார்த்த செய்திகளிலேயே மிகவும் வருத்தப்பட்ட செய்தி ஈசா மையத்துக்கு இந்திய ஜனாதிபதி வருகை என்பது தான். தமிழகத்தில் நிகழ்ந்த இயற்கை அழிவுகள், தூத்துக்குடி கலவரம் என்று எத்தனையோ ஆற்றுப்படுத்தல்களுக்கு வராத மக்கள் நிர்வாகிகள் இப்படி சமய வியாபாரிகளின் விருந்துக்கு வருகிறார்களே 🙁
நேசமணி அண்ணன் தாக்கப்பட்ட உருக்கமான காட்சிக்கு
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான், இளம் புயல் அனிருத் ஆகியோர் இசை வடிவம் கொடுத்த போது
#Pray_for_Neasamani
தேனிசைத் தென்றல் தேவாவின் தலை சிறந்த பாடல் தொகுதியை அவர் சிட்னி வந்த போது கையளித்து விட்டு நான் அவரிடம் சொன்ன கருத்து.
“பாடகர் ஹரிஹரனைத் தமிழ்த் திரையிசையில் மிக அற்புதமாகப் பயன்படுத்தியவர்களில் நீங்களே முதல்வர்” என்று.
மானூத்து மந்தையிலே
மாங்குட்டி பெத்த மயிலே ❤️
வழக்கமா 6,7 மணி நேரம் எடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பதிவு,
SPB வந்தார் 45 நிமிடத்தில்
பாடலில் எல்லா அலங்காரமும் செய்து பாடி முடித்து விட்டுப் போய் விட்டார் 😘😘😘
எப்பிறப்பில் காண்போமோ
❤️
பார்த்த விழி பார்த்த படி
பூத்து இருக்க….♥️♥️♥️
ஆன்மாவானது இந்த உலகியல் ஆசைகளைத் துறந்து இறைவனடி சேரும் மெய்த்தன்மையைச் சைவ சித்தாந்தம் வலியுறுத்துகின்றது. அதையே “பாசம்” என்ற உலகியல் இன்பங்களைக் கடந்து “பசு” ஆகிய மனிதப் பிறவி “பதி” எனும் இறைவனை அடையும் நெறியையே பதி, பசு, பாசம்…
ரசிகனில் கலந்த அசல் கலைஞன்
எஸ்பிபிக்கு கடைக்கோடி ரசிகனான என்னை அழைத்து முழு நீளக் கட்டுரை எழுத வைத்திருக்கிறது ஆனந்த விகடன்.
இந்த மாதிரிக் கொடுப்பினை ஏழேழு யுகம் நான் செய்த தவம்.
கண்கள் பனிக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 😍🙏
@AnandaVikatan
கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 20 = 70 ❤️
@ikamalhaasan
என் பிரியத்துக்குரிய நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று.
கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் "நீ ஒரு காதல் சங்கீதம்"
அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் 🙏
இந்த ஒரே படத்தில் எத்தனை விதமான பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக மின்னும்.
சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான் ❤️
அஜித்தின் நடிப்பில் பிடித்தது.
சமூகத்துக்காகப் போராடியவன் வாழ்வு எவ்வளவு தூரம் சிதைக்கப்படுகிறது, அவன் கூடப் போராடியவர்கள் மனமாற்றம் எழுப்பும் வலி இதையெல்லாம் இதை விட வலிமையாகக் காட்ட முடியாது என்பேன். இது தான் உலகியல் நியதி என்பது ஈழத்திலும் கண்கிறோம்
@vp_offl
உடன் இது
❤️அபூர்வ சகோதரர்கள் ❤️
35 ஆண்டுகள் ❤️
கலைஞானி கமலஹாசனின் பொன் விழா கடந்த திரை வாழ்வில் மட்டுமல்ல நூற்றாண்டு கண்ட சினிமா வாழ்விலும் தவிர்க்க முடியாத படைப்பு இந்த அபூர்வ சகோதரர்கள் என்றால் அதற்கு மிகையில்லை. இந்த முப்பது ஆண்டுகள் கடந்தும் அண்மையில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்த…
கார்த்திக்ராஜாவைக் கலாய்த்து இளையராஜா கொடுத்த சிம்பொனிப் பாட்டு
மனோபாலாவுடன் கார்த்திக்ராஜா பேட்டியைக் கேட்டால் அவருக்கு மேற்கத்தேய இசை மீது எவ்வளவு நாட்டம் இருக்கும் என்று புரியும். அதை வைத்துக் கொண்டு ஒரு பாடல் பிறந்த கதை சொல்கிறார் கேளுங்கள் முதலில் அதை.
இப்ப வந்து ராஜா…
#பேட்ட
ஆகா இப்பிடி ஒரு ரஜினியைப் பார்த்து எத்தனை வருடங்களாச்சு என்று ஆச்சரியமும், குதூகலமும் தலை தூக்குகிறது.
மன்னன், அண்ணாமலை காலத்து ரஜினியைக் கொண்டாடி அப்படியே கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
சூப்பர் ஸ்டாரின் அதே இள���ைத் துள்ளல், காந்தக் குரல்
@karthiksubbaraj
ஏன் போராடினீர்கள்?
போராட்டம் ஏன் நடந்தது?
நீங்கள் போராடியதால் தானே இவ்வளவு இழப்புகள்?
போராடாவிட்டால் செழிப்பாக இருந்திருப்பீர்களே
நீங்கள் நல்லவர்கள் ஆனால் செத்தவன் தீவிரவாதி
🖕🏻இதையெல்லாம் உரிமையைப் பறித்து வைத்த அதிகார வர்க்கம் சொல்லக் கேட்டோம்
ஈழத்தில் இப்போ தமிழகத்தில்
உள்ளே கொஞ்ச நேரம் நின்றேன். புதுப் பெயர், புது உரிமையாளர், புது வேலையாட்கள் ஒன்றுக்கு மூன்றாக.
ஏனோ அவர்களிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை.
நான் முன்னர் எடுத்த அதே பஸ் இற்குக் காத்திருந்து அந்த பஸ் இல் இருந்து கொண்டே இவற்றை அசை போடுகிறேன்.
#மெல்பர்ன்_உலாத்தல்
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன் என்று எல்லார் படங்களுக்கும் பாட்டும் போட்டு பின்னணி இசையும் கொடுத்து எல்லாத்தையும் தீபாவளிக்கே இறக்கி விடும் ராஜா காலம் இனிமே வரவே வராது 💪
“இளையராஜா”வின்ர ஆள் ❤️
ஏன் இந்த வயசில் இவ்வளவு தோட்டவேலை?”
என்று கேட்டால்,
“இதுதான் வாழ்க்கை”
என்பார்கள்.
இளையராஜாவும் அப்படித்தான், 80 வயதைத் தொட்டு நிற்கும் கடின உழைப்பாளி
மேலும் படிக்க
வெற்றிகளில் நீ போற்றப்பட்டாய்
வீழ்தலில் நீ விமர்சிக்கப்பட்டாய்
நினைப்பு மூட்டுவாய்
நம்மினம் ஒவ்வொன்றாய்
இழக்கையில்
உறுதியின் உறைவிடமே
நீ நிலைத்திருப்பாய்
ஒரே தலைவர் நம் தமிழினத் தேசியத் தலைவர் பிறந்த நாள்
🍁கார்த்திகை 26
கார்த்திக்ராஜா சமீப பேட்டிகளில் தகவல்களை அள்ளி விடுகிறார் என்பது இன்ப ஆச்சரியம். கார்த்திக்ராஜாவின் மூத்த மகனை இளையராஜா தோளில் வைத்துத் தாலாட்டும் பிரத்தியோக வீடியோவையும் விஜய் டிவி நீயா நானாவுக்காகப் பகிர்ந்து கொண்டார்
��.ஆர்.ரஹ்மான் ❤️ பிரபு தேவா
நீக்ரோ ரேஞ்சில் இருப்பவர்கள் எல்லாம் நடிக்க வந்து விட்டார்கள் என்ற ரேஞ்சில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் ஒரு அட்டைப் படக் கட்டுரை வந்த போது அதைப் படித்து அதிர்ந்து போனேன். மிக மோசமான தனி நபர் தாக்குதலாக அது பட்டது.
ஆனால் அங்கே சொல்லாமல் சொன்ன…
உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட மகிழ்ச்சியான தருணத்தில் இன்னொரு பூரிப்பான செய்தியையும் அதைத் தொட்டுப் பேச வேண்டும்.
இந்த மீட்புப் பணிக்கு உறுதுணையாக இருந்தவர் Australia நாட்டின் சுரங்க நிர்மாண நிபுணரான (Tunnelling Expert) Arnold Dix.…
SPB யின் குரலை உரிமை கொண்டாடப் பல பேர். ஆனால் ரஜினி அளவுக்கு அவரின் நளினங்களை உள்வாங்கி அப்படியே திருப்பிக் கொடுக்க யாரால் முடியும் என்று அதிசயித்த பாட்டு இது.
அந்த வெட்கமும் குறும்பும் , நளின நடையுமாக மனுஷர் SPB ஆகி விடுவார் ❤️
இன்று repeat mode இல் வைத்துக் கேட்ட பாட்டு.…
வித்யா சாகர் ❤️
பாடலின் ஒவ்வொரு வரிகளையும் தானும் பாடிப் பார்த்துச் சரி பார்த்துக் கொள்கிறார்.
இசை வரும் போதெல்லாம் அங்க அசைவு வழியே அங்கே இசைக் கலைஞர்களுக்கு சைகை வழி காட்டுகிறார்.
கூட்டுக் குரல்கள் கூடத் தப்பவில்லை.
என்ன மனுஷர் ஐயா நீங்கள் பெருமிதத்தில் கண்ணீர்
❤️❤️❤️❤️
“ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா”
நான்கு நண்பர்கள் பாடும் காணொளியைக் கண்ட போது அட இப்படி ஒரு இசையால் இணைந்த நட்பு வட்டம் நிஜத்திலும் இருக்கக் கூடாதா என்று நினைத்து அடிக்கடி பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
சிங்கீதம் சீனிவாசராவ் என்ற இளைஞருக்குள் இருக்கும் கள்ளமற்ற நேசமும், ஆற்றலும் முகத்தில் பூரிப்பாகத் தெரியப் பார்ப்பதே பரிபூரண சுகம்.
வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் கொண்டாடுவோம் ❤️
ரஜினிக்குத் உழைப்பாளி படத் தயாரிப்பாளர் இரு கை நிறையக் கொடுத்த தங்கக் காசுகளை அப்படியே படத் தொழிலாளர்களுக்குக் கொடுத்ததாகத் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை சொன்னார்
படையப்பா படத்தில் பணியாற்றியவர்களுக்குக் கிட்டத்தட்ட இரு மடங்காக மேலதிக சம்பளம் கொடுத்ததாக தேனப்பன் சொல்கிறார்.